தமிழக மக்களின் ஆதரவு அலை எங்கள் பக்கம் உள்ளது; டி.ஜெயக்குமார் சொல்கிறார்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் பூத் கமிட்டி மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,
இதில் முன்னாள் அமைச்சர்கள், கழக அமைப்பு செயலாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்,
இந்த கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது :-
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் கழக பொதுச் செயலாளர் தலைமையில் உறுதியான அஸ்திவாரம் பூத் கமிட்டி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை கூட்டம் நடைபெற்றது.கழகத்திற்கு அஸ்திவாரம் சிறந்த தளமாக அமைய வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டு விரைந்து முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் என்ற படகோட்டி திரைப்பட பாடல் உள்ளது, பல்வேறு திட்டங்கள் பொருளாதார அடிப்படையில் கொண்டு வரப்பட்டது.திமுக ஆட்சியில் மீனவர்களுக்கு எதுவும் கொண்டு வரவில்லை. மீனவர்கள் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள்..
சங்கரய்யா என்ற மாமனிதர் மறைந்து விட்டார்.அவர் மறைவு மிகுந்த வேதனைக்குரிய செய்தியாகும்.திமுக அரசு மீது அதிருப்தியில் இருக்கிறோம் திமுக தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறுவோம்.
எங்கள் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக மக்களின் ஆதரவு அலை எங்கள் பக்கத்தில் உள்ளது.முரண்பாடு உடைய மொத்த உருவமாக திமுக கூட்டணி உள்ளது எப்போது வேண்டுமானாலும் கழன்று விடுவார்கள்.
பல்கலைகழக துணை வேந்தராக முதலமைச்சர் இருக்க வேண்டும் என்று அப்போது முன்னாள் முதலமைச்சர் அம்மா சொன்ன போது ஏன் எதிர்த்தீர்கள், ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுவது போல் உள்ளது. சட்டசபையில் பொதுக் கூட்டங்களில் தரக் குறைவாக பேசி விட்டு இப்போது பாசாங்கு நடிப்பு .நமக்கு வாய்த்த அடிமைகள் திறமைசாலிகள், வாய் தான் காது வரை உள்ளது என்பது போல் உள்ளது.
ஒரு சதவீதம் கூட உண்மை இல்லாத விசயத்தை கம்பி கட்டும் கதை எல்லாம் பேரவை தலைவர் சொல்லி வருகிறார்.அவரை அமைச்சராக ஆக்குகிறார்களோ இல்லையோ அது அவர்கள் முடிவு ஆனால் அதற்காக தான் பேசி வருகிறார்.தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பேசியவர் ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது அது தான் இப்படி பேசி வருகிறார்.
மாநில அரசு என்றாலும் மத்திய அரசு என்றாலும் மக்கள் விரோத போக்காக செயல்பட்டால் அது பற்றியும் பிரசாரத்தில் பேசப்படும்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஆளுநர் குற்றச்சாட்டு விசாரிக்க அனுமதி அளித்தது தொடர்பாக நீதிமன்றத்தை நாடி நிரபராதி யார் என்று நிரூபிப்போம்.
முதலமைச்சருக்கு நாட்டை பற்றி ஏதாவது கவலை உள்ளதா? தொடர்ந்து மழை பெய்து வரக்கூடிய நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி மக்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். சுகாதாரத்துறை மக்கள் நல்வாழ்வுத்துறை என்று மாற்றப்பட்டது ஆனால் மக்கள் நல்வாழ்வு துறையாக செயல்படுகிறதா? மக்களுக்கு தேவையான மருந்துகளே அங்கு கிடையாது.
இவ்வாறு டி. ஜெயக்குமார் கூறினார்.
