• June 7, 2025

3 பவுன் நகைக்காக பெண் கொலை: போலீஸ் விசாரணையில் தகவல்

 3 பவுன் நகைக்காக  பெண் கொலை:  போலீஸ் விசாரணையில் தகவல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளம் பூந்தோட்டம் காலனி பகுதியை சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி முத்துலட்சுமி (வயது65). இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குருசாமி இறந்துவிட்டதால் முத்துலட்சுமி வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் ஒரு சில நாட்களுக்கு முன்பு  முத்துலட்சுமியின் உறவினருக்கு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முத்துலட்சுமி செல்லவில்லை.  அதே சமயம் அன்றைய தினம் இரவு முத்துலட்சுமி மர்மமான முறையில் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

கோவில்பட்டி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் நேரில் சென்று  சென்று கதவை உடைத்து உள்ளே சென்றபோது  வீட்டின் பின்வாசலில் முத்துலட்சுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முத்துலட்சுமி கழுத்தில் வெட்டப்பட்டும், 2 விரல்கள் வெட்டப்பட்டும் கொலை செய்யப்பட்டிருந்தார். அவரது கழுத்தில் அணிந்தி ருந்த 3 பவுன் நகை, அவர் விரலில் அணிந்திருந்த மோதிரம் திருடப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

எனவே நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. இந்த கொலையை செய்தவர்கள் யார் என்பது மர்மமாக உள்ளது. பலநாட்கள் நோட்டமிட்டு இந்த கொலைதிட்டமிட்டு  நடந்து இருக்கிறது என்பது கொலையாளிகள் பற்றி எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *