தூத்துக்குடி உள்பட 38 மாவட்ட தலைநகரங்களில் சுகாதார நடைபாதை திறப்பு

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் தலைநகரங்களில் நடப்போம் நலம் பெறுவோம்- என்ற பெயரில் 8 கி.மீ.தூர சுகாதார நடைபாதை(ஹெல்த் வாக் சாலை) அமைக்கப்பட்டு உள்ளது.
இவற்றின் திறப்பு விழா இன்று (சனிக்கிழமை) ஒரே நேரத்தில் நடந்தது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் .உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெல் ஹோட்டல் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில் இருந்து அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ,மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் ,ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்.எம்.சி.சண்முகையா ,தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர்.ச.தினேஷ் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன்,சார் ஆட்சியர்.கவுரவ் குமார், துணை இயக்குனர் சுகாதார பணிகள் மரு.எஸ்.பொற்செல்வன் ஆகியோர் பார்வையிட்டனர்
பின்னர் அனைவரும் பெல் ஹோட்டல் முன்புறம் தொடங்கி மீன்பிடி துறைமுகம், இனிகோ நகர், ரோச் பூங்கா, படகு குழாம் வரை 4 கீ.மி தூரம் சென்று மீண்டும் அதே வழியில் திரும்பி பெல் ஹோட்டல் முன்புறம் முடியும் வரை நடைபாதையில் பொதுமக்களுடன் சென்று நடை பயிற்சி மேற்கொண்டனர்.

