• June 7, 2025

கோவில்பட்டியில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

 கோவில்பட்டியில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

கோவில்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி விழாவையொட்டி தேவரின மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. அண்ணா பஸ் நிலையம் முன்புறம் உள்ள தேவர் சிலை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நிறுவன தலைவர் வெயிலுமுத்துப்பாண்டியன் தலைமை தாங்கினார்.

. மாநில பொதுச் செயலாளர் வேம்பு பாண்டியன், பொறுப்பாளர் ஆரியா பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் துரைப்பாண்டியன், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கம் நிறுவன தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அந்தோணி, தேவரின மக்கள் பாதுகாப்பு இயக்கம் ராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு தையல் மிஷின்கள், சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி, அன்னதானத்தை  தொடங்கி வைத்தனர்.

விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பன், மோகன், தேவரின மக்கள் பாதுகாப்பு இயக்கம் தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி செயலாளர் அரிப்பாண்டியன், இளைஞரணி தலைவர் ரமேஷ்பாண்டியன், நெல்லை மாவட்ட செயலாளர் மாயாண்டிபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *