• June 7, 2025

பொதுப்பணித்துறை அதிகாரி அலுவலகத்தில் ரூ.3.37 லட்சம் லஞ்சப்பணம் பறிமுதல்

 பொதுப்பணித்துறை அதிகாரி அலுவலகத்தில் ரூ.3.37 லட்சம் லஞ்சப்பணம் பறிமுதல்

தூத்துக்குடி வ.உ.சி. சாலையில் பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் கட்டுமான செயற்பொறயாளா், உதவி செயற்பொறியாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் பெறுவதாக தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசாருக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இதையடுத்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் பீட்டா் பால்துரை தலைமையில், ஆய்வாளா் அனிதா, உதவி ஆய்வாளா் ஜம்புநாதன் மற்றும் போலீஸாா் அடங்கிய குழுவினா் பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் அலுவலகத்தில் நேற்று  புதன்கிழமை மாலையில் சோதனை மேற்கொண்டனா்.

இந்தச் சோதனையில், அங்கிருந்த உதவியாளா் ஒருவரிடமிருந்து கணக்கில் காட்டப்படாத சுமாா் ரூ.3.37 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தை கைப்பற்றிய போலீஸாா் தொடா்ந்து சோதனை மேற்கொண்டு விசாரித்து வருகின்றனா். இச்சோதனை இரவு வரை நீடித்தது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *