சுந்தரராஜபெருமாள் திருக்கல்யாணம்
கோவில்பட்டி பூவனநாதசுவாமி கோவிலுடன் இணைந்த ஸ்ரீதேவி- நீலாதேவி உடனுறை சுந்தரராஜபெருமாள் கோவிலில் திருகலான உற்சவ விழா நேற்று மாலை நடைபெற்றது.
மாலை 5,30 மணிக்கு மேல் ஸ்ரீதேவி-நீளாதேவி உடனுறை சுந்தரராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு களித்தனர், இரவில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது,
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, கட்டளைதாரர் கண்ணன்-மங்கத்தாய் ஆகியோர் செய்து இருந்தனர்,