தூத்துக்குடி மாவட்டத்தில் 30ம் தேதி மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு
![தூத்துக்குடி மாவட்டத்தில் 30ம் தேதி மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு](https://tn96news.com/wp-content/uploads/2023/10/89d6e6a2-ce68-47aa-9c75-06253ea2bab8-1-850x560.jpeg)
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவை முன்னிட்டு 30.10.2023 அன்று அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். மேற்படி நாளில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் அன்றைய தினம் மதுபான விற்பனை நடைபெறக் கூடாது.
மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)