• June 6, 2025

கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில் புத்தக கண்காட்சி

 கோவில்பட்டி  நாடார் நடுநிலைப்பள்ளியில் புத்தக கண்காட்சி

கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில் 2 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சியை மாணவர்களே தொடங்கி வைத்தனர். கண்காட்சியில்  தேசத்தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, அறிவியல், அகராதி, இலக்கியம், கட்டுரை, நாவல் ஆகிய தலைப்புகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

மாணவர்களுக்கான புத்தக கண்காட்சியினை 6-ம்வகுப்பு மாணவிகள் சபிஹா, சாதனா. ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். புத்தக கண்காட்சியினை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பார்வையிட்டனர். மேலும் ஆசிரியர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் செல்வி, முன்னாள் மாணவர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மிருத்திகா பதிப்பக உரிமையாளர் ராஜபாண்டி வரவேற்றார். முடிவில் புத்தக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *