தமிழ்நாட்டில் தனியார் மூலம் மின்சார பஸ்கள் இயக்க முடிவு

தமிழ்நாடு அரசால் கொள்முதல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்ட மின்சார பஸ்கள் தனியார் நிறுவனங்களால் இயக்கப்பட்டு பராமரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார பஸ்கள் பொது தனியார் கூட்டு மாதிரி கீழ் இயக்கப்படும்,அதில் ஓட்டுநர்கள் தனியார் நிறுவனத்தால் வழங்கப்படும்,நடத்துனர்கள் அரசாங்கத்தால் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு ஒரு கிலோமீட்டர் அடிப்படையில் நிர்ணயித்த கட்டணத்தின் அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் A முதல் B வரை மின்சார பஸ்களை இயக்கும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2026 ஆம் ஆண்டு முதல் புதிய டீசல் பஸ்கள் வாங்குவதை முற்றிலும் நிறுத்த அரசு முடிவு செய்துள்ளது. தற்போது தமிழகத்தில் இயங்கும் அரசு டீசல் பஸ்களை 2026 ஆம் ஆண்டு முதல் அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்ட எலக்ட்ரிக் பஸ்களாக மாற்றுவதற்கும் தமிழக அரசு முயற்சி செய்து கொண்டுள்ளது..
இருப்பினும் திட்டமிட்டபடி மின்சார பஸ்களை வழங்குவதற்கான திட்டங்கள் சரியான நடை பாதை பொறுத்து இது நடக்கும் என்று தமிழ்நாடு போக்குவரத்து வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் பஸ்களை இயக்கி வரும் மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 100 மின்சார பஸ்களை வாங்க விரைவில் டெண்டர் விடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான நிதியை (ஜெர்மன் டெவலப்மெண்ட் பேங்க் மூலம் ஒவ்வொரு பஸ்சுக்கும் சுமார் ரூ.2 கோடி வழங்கும் டெண்டரை வழங்க நிதி நிறுவனத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழுக்காக மாநில அரசு காத்திருக்கிறது.
இதற்காக முதற்கட்டமாக உலக வங்கியின் நிதி உதவி மூலம் சுமார் 500 மின்சார பஸ்களை வாங்குவதற்கு ஒரு மாதத்தில் டெண்டர் விடவும் மாநில அரசு திட்டமிடப்பட்டுள்ளது. 2ம் கட்டமாக மேலும் 500 மின்சார பஸ்கள் நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் பல வருடங்களாக புதிய பஸ்கள் வாங்காமல் பழைய பஸ்களை பயன்படுத்தி வந்த நிலையில் முதல் முறையாக புதிய பஸ்களை வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி வணிக வாகன உற்பத்தியாளர் தமிழ்நாட்டின் அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்ட நிறுவனமான அசோக் லேலண்ட் தமிழ்நாடு அரசு போக்குவரத்து நிறுவனத்திடமிருந்து. சுமார் 1,750 பஸ்களை உற்பத்தி செய்து கொடுக்க ஆர்டர் பெற்றுள்ளது என அறிவித்துள்ளது,சமீபத்தில் பல்வேறு மாநில போக்குவரத்து நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட ஆடர்களின் பின்னணியில்.இந்த ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது என்று இந்துஸ்தான் குழுமம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து நிறுவனத்திடம்யிருந்து இந்த ஆர்டரை பெறுவதற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் எங்களின் உயர்ந்த தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளுடன் இணைந்து சிறப்பான பஸ்களை வழங்க முடிவு செய்துள்ளோம். தமிழ்நாட்டிற்கு பஸ்களை உறுதி செய்வதன் மூலம் இந்தியாவில் பஸ்களின் உற்பத்தியில் எங்கள் தலைமையிலான தாக்கம் வைத்துக்கொள்ள உதவும் என்று அசோக் லேலண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
