தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்ட பயனாளிகளை சந்தித்து குறைகள் கேட்ட எம்.எல்.ஏ., யூனியன் தலைவர்

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தருவைக்குளம் ஊராட்சியில் அனந்தமாடன் பச்சேரி மேல அரசடி ஊராட்சியில் மேல அரசடி, ஏ.குமாரபுரம் மற்றும் மேல மருதூர் கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் பணிபுரியும் பொதுமக்களை
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி..சண்முகையா, யூனியன் தலைவர் எல்..ரமேஷ் ஆகியோர் இன்று நேரில் சந்தித்தனர்.
பொதுமக்கள் பணிபுரியும் இடத்திற்கு நேரில் சென்று அவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்கள். மேலும் பொதுமக்கள் அளித்த கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர் சிவபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் .சந்திரா, பணி மேற்பார்வையாளர் .பரமசிவன், துணை வட்டாட்சியர் .ஸ்டாலின். கிராம நிர்வாக அலுவலர் .ராஜா. ஒன்றிய கவுன்சிலர் .தெய்வரானி ஞானசேகர், தருவைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர்.காடோடி மேல அரசடி ஊராட்சி மன்ற துணை தலைவர் .ராமர், ஊராட்சி செயலர் .பழனி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
