கோவில்பட்டியில் வழக்கறிஞர் சங்கங்களை ஒன்றாக இணைத்து தேர்தல் நடத்த கருத்து கேட்பு கூட்டம்

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு நிர்வாக பிரச்சினைகளால் இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு கொண்டிருகிறது. இந்த் நிலையில் கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தினை ஒன்றாக இணைத்து தேர்தல் நடத்த வேண்டும் என்று கோவில்பட்டி வழக்கறிஞர்கள் சார்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு பார்கவுன்சில் சார்பாக இன்று 6.10.2023 ல் கோவில்பட்டி வழக்கறிஞர் சங்க நூலக கட்டிடத்தில் வழக்கறிஞர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பார்கவுன்சில் நிர்வாகிகள் அசோக் மற்றும் அய்யாவு ஆகியோர் தலைமை தாங்கினர்.
கூட்டத்தில் முன்னாள் வழக்கறிஞர் சங்கத் தலைவர் டி.தேன்மோகன் செயலாளர், எம்.முத்துசாமி, தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு துணை செயலாளர் ஜி.எம். சங்கர்கணேஷ் மாநில செயற்குழு உறுப்பினர் பி.ஜேபாரத்குமார், மூத்த வழக்கறிஞர்கள் கே.சந்திரசேகர், போஸ், போகர்நாதன், மகேந்திரகுமார், மோகன்தாஸ், ராமசுப்ரமணியன், மகேஷ்குமார், ஆழ்வார்சாமி சிவக்குமார், ஜெயசீலன், விஜயபாஸ்கர், சீனிவாசன், ராஜ்மோகன், நீதிபாண்டியன், சிவனுபாண்டி, விஜயமூர்த்தி, ரெங்கராஜன், மணிகண்ட நாகராஜன், கருப்பசாமி,கோபி, ரவிக்குமார், ஸ்ரீதர், சண்முகராஜ், காளீஸ்வரன், ரத்தினராஜா உட்பட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்
கருத்து கேட்பு கூட்டத்தில் அனைத்து வழக்கறிஞர்களின் கருத்துக்களும் கோரிக்கைகளும் பார்கவுன்சில் உறுப்பினர்களால் கவனமாக பரிசீலிக்கப்பட்டது. இறுதியாக அடுத்த 2 நாட்களில் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு மற்றும் அது சார்ந்த வழிகாட்டுதல்களும் பார்கவுன்சில் சார்பாக வெளியிடப்படும் என்று பார்கவுன்சில் சார்பில் அனுப்பப்பட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.
எனவே கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்திற்கு அனைத்து வழக்கறிஞர்களையும் ஒருங்கிணைத்து பார் கவுன்சில் நிர்வாகிகள் தலைமையில் தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
