• June 7, 2025

கோவில்பட்டியில் புதுப்பிக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் திறப்பு

 கோவில்பட்டியில் புதுப்பிக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் திறப்பு

கோவில்பட்டியில் புதுரோடு விலக்கு சந்திப்பு பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னல் போக்குவரத்து காவல்துறை சார்பில் ரூ.2.5 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் போலீஸ்காரர் அமர்ந்து கொள்வதற்கான கூண்டு அமைக்கப்பட்டு இருக்கிறது.

புதுபிக்கப்பட்ட  எட்டயபுரம் சாலை. போக்குவரத்து சிக்னல் திறப்பு விழா நடைபெற்றது. கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கி  சிக்னலை திறந்து வைத்து பார்வையிட்டார். கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். தொடர்ந்து சாலை பாதுகாப்பு துண்டு பிரசுரங்கள் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை, நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை டி.எஸ்.பி. வெங்கடேஷ் தொடங்கி வைத்தார். தொழிலதிபர் அபிராமி முருகன், ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்த விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் சந்திரசேகர், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் செல்வக்குமார், உதவி ஆய்வாளர்கள் தர்மராஜ், ரவீந்திரன், அங்குத்தாய், சத்யா, மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆரோக்கிய ஜென்ஸி, தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *