சமுதாய வளைகாப்பு விழா; 100 கர்ப்பிணிகள் பங்கேற்பு

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் விளாத்திகுளத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் 100- கர்ப்பிணி பெண்கள் பங்கேற்றனர்.
சமுதாய வளைகாப்பு விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி..மார்கண்டேயன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு சீதனப் பொருட்களை வழங்கினார்.

குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் தாஜீன்னிசா, மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஅய்யன் ராஜ், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் ,தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணைத்தலைவர் சென்றாய பெருமாள் உட்பட வார்டு உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
