எட்டையபுரம் பேரூராட்சி 5 வார்டு மக்கள் பயன்பெறும் வகையில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

எட்டையபுரம் பேரூராட்சி 2,6,11,12,13-வது வார்டு மக்கள் பயன்பெறும் வகையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்படுகிறது.
இந்த் பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி..மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார். கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நவநீதகண்ணன் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் எட்டையபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், எட்டையபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன், ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இம்மானுவேல் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல், மாவட்ட பிரதிநிதி கல்லடிவீரன், பாரதியார் நூற்பாலை முன்னாள் சேர்மன் ஆழ்வார் உதயகுமார், வார்டு உறுப்பினர் தங்கம்மாள், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
எட்டையபுரம் பேரூராட்சி 2,3,6,11-வது வார்டு மக்கள் பயன்பெறும் வகையில் 15-வது நிதிக்குழுமானிய திட்டத்தின் கீழ் ரூ.15-லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் அமைக்கும் பணியினை விளாத்திகுளம்சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.
மேலும் எட்டையபுரம் பேரூராட்சி 15-வது வார்டில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.11-லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தினை ஜி.வி.மார்கண்டேயன் திறந்து வைத்தார்.
