கோவில்பட்டியில் காந்திஜியின் ரங்கோலி ஓவியத்திற்கு அகல் விளக்கேற்றி பொது இடங்களை தூய்மையாக வைத்திருக்க உறுதியேற்பு
கோவில்பட்டி கொண்டய ராஜு ஓவிய பயிற்சி பள்ளி சார்பில் காந்தி ஜெயந்தியை (அக்டோபர் 2)வரவேற்கும் வகையில் மகாத்மா காந்தியின் ரங்கோலி ஓவியத்திற்கு அகல் விளக்கேற்றி மரியாதை செய்யும் நிகழ்ச்சி பயிற்சி பள்ளியில் நடந்தது.
ஓவிய பயிற்சி பள்ளி மாணவர்கள் காந்திஜியை ரங்கோலி கோலமாக வரைந்து அகல் விளக்கேற்றி மரியாதை செய்துபொது இடங்களை தூய்மையாக வைத்திருக்கவும்,துணி பைகளை பயன்படுத்தவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு ஓவிய பயிற்சி பள்ளி நிர்வாகி முருக பூபதி தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க உறுப்பினர்கள் முத்து முருகன்,நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஓவிய பயிற்சி பள்ளி ஆசிரியை முத்துகோமதி அனைவரையும் வரவேற்றார்.
ஓவிய பயிற்சி பள்ளி மாணவர்கள் பேச்சியம்மாள்,விக்னேஸ்வரி,விஜயலட்சுமி,தீபிகா,ராஜலட்சுமி,சத்தியரூபனி ஆகியோர் ரங்கோலி கோலத்தில் காந்திஜியை வரைந்து அதில் அகல் விளக்கு ஏற்றி மரியாதை செய்தனர்.
ஓவிய பயிற்சி பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஓவிய பயிற்சி பள்ளி ஒருங்கிணைப்பாளர் கணேஷ் நன்றி கூறினார்.