மாநில தரைபந்து போட்டி: தூத்துக்குடி மாவட்ட பெண்கள் அணி 2,3-வது இடங்கள் பிடித்து சாதனை

கன்னியாகுமரி மாவட்டம் நீர்வகுழியில் உள்ள செயின்ட் ஜூட்ஸ் உயர் தொழில்நுட்ப பள்ளியில் 17வது மாநில தரைபந்து போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. 14 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றன.
இப்போட்டிகளின் நிறைவில் தூத்துக்குடி மாவட்ட தரைபந்து கழக 19 வயது பெண்கள் அணி இரண்டாம் இடமும்.14 வயது பெண்கள் அணி மூன்றாம் இடமும் பெற்று சாதனை படைத்தனர்.

வெற்றி பெற்ற அணிகளின் வீராங்கனைகளுக்கு தூத்துக்குடி மாவட்ட தரைபந்து கழக தலைவர் டாக்டர்.ஶ்ரீவெங்கடேஷ் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது தூத்துக்குடி மாவட்ட தரைப்பந்து கழக செயலாளர் திரு.வேல்முருகன்
துணைதலைவர்கள் டாக்டர்.சீனி வாசகன், டாக்டர்.குரு சித்ர சண்முக பாரதி, டாக்டர்.பாலமுருகன், .உமாசங்கர், .சுரேஷ்குமார், பொருளாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
துணை செயலாளர்கள் துரை,முகேஷ்குமார் பயிற்சியாளர்கள் பிரேம்குமார்,துர்க்கைஅம்மாள், ஜெய்கணேஷ்,மகேஷ்குமார்,மணிகண்டன். செயற்குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், கண்ணன்
ஜெகதிஷ்வரன்,கார்த்திக்ராஜா,ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு, விழாவில் கலந்து கொண்ட அனைவரும் தங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்
