கோவில்பட்டியில் வேகத்தடையில் வேன் கவிழ்ந்து விபத்து ; பெண் பலி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே துரைசாமிபுரம் கிராமத்தில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட 30க்கும் மேற்பட்டோர் வேனில் புறப்பட்டு வந்தனர்.
அந்த வேன் கோவில்பட்டி – எட்டயபுரம் நெடுஞ்சாலையில் வ.உ.சி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள வேகத் தடையை டிரைவர் கவனிக்கவில்லை.
வேகத்தடைக்கான அடையாளம் இல்லாததால் வேகமாக வந்த வேன், வேகத்தடையில் ஏறியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேனில் இருந்தவர்கள் ஒருவருக்கொருவர் மோதியும், இடிப்பாட்டிபில் சிக்கியும் காயம் அடைந்தனர். துரைச்சாமிபுரம் கிராமத்தை சேர்ந்த பஞ்சவர்ணம் (வயது 55) என்ற பெண்மணி சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த அடிபட்டு உயிரிழந்தார். 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். உடனடியாக போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்தனர். கவிழ்ந்து கிடந்த வேன், கிரேன் மூலம் தூக்கி நிறுத்தப்பட்டது. பின்னர் காயம் அடைந்தவர்கள் மீட் கப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்