எட்டுநாயக்கன்பட்டி தூய மிக்கேல் அதிதூதர் திருவிழா இன்றுடன் நிறைவு; நாளை சிறப்பு பட்டிமன்றம்
கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி பங்கு எட்டுநாயக்கன்பட்டி தூய மிக்கேல் அதிதூதர் திருவிழா கடந்த 20 ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 5.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடந்தது.
9-ம் நாள் திருவிழா மாலை 6 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, திருவிழா சிறப்பு மாலை ஆராதனை பாளை மறை மாவட்ட காமநாயக்கன்பட்டி திருத்தலம் பேராலயமாக உயர்த்தப்பட்ட அருள்நிறை முதல் ஆண்டில் பங்கு தந்தை & திருத்தல பேராலய அதிபர் அந்தோணி குருஸ் தலைமையில் நடந்தது.
இந்த ஆராதனையில் பாளைமறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜீடு பால்ராஜ் தலைமையில் கொடியேற்ற திருப்பலியும், ஒன்பதாம் திருவிழா பாளைமறைமாவட்ட ஆயர் அந்தோணிச்சாமி தலைமையிலும் நடந்தது
.10-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 6.30 மணிக்கு ஜெபமாலையும், 7 மணிக்கு பெருவிழா திருப்பலியும் பாளை மறை வட்ட முதன்மை குரு. சூசைசெல்வராஜ் ,.கில்பர்ட் .கிறிஸ்டோபர் ஆகியோர் தலைமையில் நடந்தது. காலை 8 மணிக்கு எம். அருள் அம்புரோஸ் தலைமையில் நடந்த விழாவில் பங்கு இறை மக்கள் பங்கேற்றனர்.
காலை 10 மணிக்கு திருமுழுக்கு வழங்குதல் நிகழ்ச்சியும், காலை 11 மணிக்கு அன்னை மற்றும் புனிதர்களின் உருவ சப்பர பவனியும் நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை பவனியும், நடகிறது.
நாளை 30-ந் தேதி சனிக்கிழமை “இல்லத்திற்கு இனிமை சேர்ப்பவர்கள் மாமியாரா? மருமகளா?” என்ற தலைப்பில் இன்னிசை சிறப்பு பட்டி மன்றம் எஸ்.. அன்னபாரதி தலைமையில் நடக்க இருக்கிறது.