தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் நிறுத்தம்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சா.ஜான்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக இன்று (28 9 2023) வியாழன் அன்று தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் நாம் நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தூத்துக்குடி காவல் ஆய்வாளர் நேற்று (27/9/2023) கடைசி நேரத்தில் மாலை 7:30 மணியளவில் அனுமதி மறுத்துள்ளார்கள் .
எனவே நீதிமன்ற அனுமதி பெற்று 23.10.2023 திங்கள் மற்றும் 24.10.2023 செவ்வாய் ஆகிய நாட்களில் மீண்டும் போராட்டத்தை தொடர முடிவெடுத்துள்ளோம். அதற்கான வேலைகள் மிகத் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எனவே இன்றைய போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.