• June 9, 2025

பிஸ்கட் வாங்குவது போல் நடித்து கடைக்கார பெண்ணிடம் நகை பறிப்பு ; மர்ம நபர் கைவரிசை

 பிஸ்கட் வாங்குவது போல் நடித்து கடைக்கார பெண்ணிடம் நகை பறிப்பு ; மர்ம நபர் கைவரிசை

கோவில்பட்டியை அடுத்த பாண்டவர்மங்கலம் சண்முகசிகாமணி நகரை சேர்ந்தவர் செந்தில்ராஜ். இவருடைய மனைவி சண்முகத்தாய் (வயது 56). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மாலை சண்முகத்தாய் கடையில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர் பிஸ்கட் வேண்டும் என்று கேட்டார்.  உடனே சண்முகத்தாய் பிஸ்கட் எடுக்க கடைக்குள் சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற மர்மநபர், அவரது கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தங்கச்சங்கலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகத்தாய் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் மர்மநபர், மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்து சண்முகத்தாய் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, மர்மநபரை தேடி வருகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *