தென் இந்திய சப் ஜூனியர் ` ரோல் பால் ஸ்கேட்டிங்’ ; கோவில்பட்டியில்நடந்தது

கோவில்பட்டி உண்ணாமலை பொறியியல் கல்லூரி மைதானத்தில் 4வது சப்-ஜூனியா் ஆண்கள், பெண்களுக்கான தென் இந்திய `ஸ்கேட்டிங் ரோல் பால்’ சாம்பியன்ஷிப் 2023 – 24ஆம் ஆண்டுக்கான போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் தமிழகம், கேரளம், கா்நாடகம், தெலுங்கானா, ஆந்திரம், புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களைச் சோ்ந்த அணிகள் பங்கேற்றன. லீக் முறையில் ஆட்டம் நடைபெற்றது. நேற்று அரையிறுதி, இறுதிப் போட்டிகள் நடைபெற்றன.
ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் 3 – க்கு 2 என்ற கோல்கணக்கில் தெலுங்கானா அணியை தமிழக அணி வென்றது. பெண்களுக்கான இறுதிப் போட்டியில் 3-க்கு 0 என்ற கோல்கணக்கில் கேரள அணியை தமிழக அணி வென்றது.
பரிசளிப்பு விழாவுக்கு, தென்னிந்திய ரோல் பால் அசோசியேஷன் பொதுச்செயலாளர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ரோல் பால் அசோசியேஷன் பொதுச்செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தாா். உண்ணாமலை பொறியியல் கல்லூரி முதல்வா் சண்முகம், துணை முதல்வா் ரவீந்திரன், சித்திரம்பட்டி ஊராட்சித் தலைவா் கேசவன், மதுரை மாவட்ட ரோல் பால் அசோசியேஷன் ராபின்ராஜ்காந்தன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா்.
ஆண்கள், பெண்களுக்கான பிரிவுகளில் முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகளுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்ட அமெச்சூா் ரோல் பால் அசோசியேஷன் தலைவா் ஜோசப்ராஜ் வரவேற்றாா். செயலா் தங்கமாரியப்பன் நன்றி கூறினாா்.
#RollBallSkating #KovilpattiSkating #SkatingEvents #Sportsmanship #AthleticFeats #CommunitySports #RollerRink #SkatingCompetition #KovilpattiSports #SkateLikeAPro
