• June 8, 2025

தனியார் காற்றாலைக்காக விவசாய நிலத்தில் வண்டிப்பாதையை அளக்க கிராம மக்கள் எதிர்ப்பு

 தனியார் காற்றாலைக்காக விவசாய நிலத்தில் வண்டிப்பாதையை அளக்க   கிராம மக்கள் எதிர்ப்பு

கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் அடுத்த  மந்திகுளம் பகுதியில்  தனியார் காற்றாலை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விவசாய நிலங்களில் உள்ள வண்டி பாதையை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.

இன்று காலை வருவாய் துறை மற்றும் காவல்துறையினர் அந்த பகுதிக்கு சென்று வண்டி பாதையை அளந்து சர்வே செய்ய முயற்சி மேற்கொண்டனர். இதை அறிந்ததும் கிராம மக்கள் மற்றும் நிலத்துக்கு சொந்தக்காரர்கள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

வண்டி பாதையை ஆக்கிரமிப்பு செய்ய விடமாட்டோம் என்று எதிர்ப்பு குரல் எழுப்பினர். அவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் மக்கள் உறுதியாக இருந்தனர்.  இதனால் சர்வே எடுக்க முடியவில்லை. இந்த சம்பவத்தால்  அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *