• May 20, 2024

அரசு பள்ளி ஆசிரியை இடமாற்றத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம்

 அரசு பள்ளி ஆசிரியை இடமாற்றத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம்

கோவில்பட்டி அருகே சிதம்பரம் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதல் 10-ம் வகுப்பு வரை வகுப்புகள் செயல்படுகின்றன. 170 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் . இங்கு கோவில்பட்டியைச் சேர்ந்த உஷா ஆங்கில ஆசிரியையாக  பணியாற்றி வந்தார். இவர் தற்போது வில்லிசேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் .

இதனை கண்டித்து அப்பள்ளியில் பயிலும் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த நாலாட்டின்புத்தூர் காவல் ஆய்வாளர் சுகாதேவி மற்றும் போலீசார் மாணவ மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கல்வித் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

ஆசிரியை உஷா சில மாதங்களுக்கு முன்பு தான் வேறு பள்ளியில் இருந்து இங்கு பணிக்கு சேர்ந்துள்ளார். சிறப்பாக பாடம் நடத்துவது மட்டுமின்றி, மாணவர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதுடன் பல்வேறு உதவிகளையும் ஆசிரியை உஷா செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால்  எனவே ஆசிரியை பணிமாற்றம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *