காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமியில் மாணவர்களுக்கான ஜூனியர் ஜே.சி.ஐ. தொடக்கம்

கோவில்பட்டி ஜே.சி.ஐ. சார்பில் காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமியில் மாணவர்களுக்கான ஜூனியர் ஜே.சி.ஐ. அமைப்பு தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஜேசிஐ தலைவர் தீபன்ராஜ் தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் கண்ணப்பன் முன்னிலை வகித்தார். முன்னாள் தலைவர் டென்சிங், மண்டல அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.
ஜூனியர் ஜே.சி.ஐ. தலைவராக ஆண்டோ ஜார்ஜ் பதவி ஏற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி ஜே.சி.ஐ. துணைத்தலைவர்கள் விகாஸ், ரகுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் சூர்யா நன்றி கூறினார்.
ஜே.சி.ஐ. என்பது 115க்கும் மேற்பட்ட நாடுகளில் 5 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட உலகளாவிய இளம் தலைவர்களை கொண்ட அமைப்பாகும். பள்ளி மாணவர்களுக்கான ஜூனியர் ஜே.சி.ஐ., மாணவர்களின் தலைமை பண்பினை வளர்க்க பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும் .
