கோவில்பட்டியில் ரெயில்வே சுரங்க பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலை: கையகப்படுத்திய கட்டுமாணங்களை அகற்ற 31-ந் தேதி வரை அவகாசம்

கோவில்பட்டி நகரின் முக்கிய சாலைகளில் ஒன்று இளையரசனேந்தல் சாலை. இங்கு வைகோ முயற்சியினால் அமைய இருந்த ரெயில்வே மேம்பாலத்துக்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மேம்பாலத்துக்கு பதிலாக தரைப்பாலம் கட்டப்பட்டது.
இந்த பாலம் பொதுமக்களுக்கு பயன் அளிப்பதாக அமையவில்லை. பாலத்தின் இருபுறமும் வாகனங்கள் செல்லும் அளவுக்கு சர்வீஸ் சாலை இல்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் கடுமையான இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள்.
மேலும் வடிகால் வசதிநபார்டு மற்றும் கிராம சாலைகள் கொட சரி இல்லாத காரணத்தினால் பாலத்தில் இருந்து கழிவுநீர் வழிந்து கொண்டே இருக்கிறது. இதனால் பாலத்தின் நடுப்பகுதியில் எப்போதும் சாக்கடை தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
மழைக்காலம் வந்து விட்டால் கழிவு நீருடன் மழைநீரும் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். பல நேரங்களில் பயணிகளுடன் பஸ் மற்றும் வேன்கள் சிக்கிகொண்ட சம்பவங்கள் எல்லாம் இந்த பாலத்தில் நடந்து வருகின்றன. இந்த பாலத்துக்கு என்றைக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இந்தநிலையில் பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக போராடி வருகிறார்கள். பல்வேறு அமைப்புகள் சார்பாக போராட்டங்கள் நடத்துள்ளன.
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் சில மாதங்களாக இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இளையரசனேந்தல் சாலையில் பாலம் தொடங்கும் இடத்துக்கு முன்பாக இருபுறமும் உள்ள கடைகளில் ஒரு பகுதியை அகற்றும் நிலை உருவானது.
இதுதொடர்பாக கடை உரிமையாளர்களிடம் கலந்து பேசி நிலையம் கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த நிலையில் தற்போது நெடுஞ்சாலை துறை சார்பில் வெளியான அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பாலம் கட்டுதல் பணிக்கான சர்வீஸ் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிக்கு தங்களது நிலம் ஆர்ஜிதம் செய்தி நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டம் 2௦௦1 இன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் செயல்முறைகளின் படி தங்களது இடத்திற்கு இழப்பீட்டு தொகைக்கு தீர்ப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கையகப்படுத்தப்பட்ட இடம் நெடுஞ்சாலை துறை வசமாகிறது.
தற்போது மேற்படி பால வேலைக்கான சர்வீஸ் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட வேண்டி இருப்பதால் இந்த அறிவிப்பு கிடைக்கபெற்ற தினத்தில் இருந்து 15 தினங்களுக்குள் )ஜூலை 31-ந்தேதி) மேற்படி கையகப்படுத்தப்பட்ட்டுள்ள இடங்களில் உள்ள கட்டுமாணங்களை அப்புறப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளபப்டுகிறது. அவ்வாறு அகற்றாத கட்டிட பகுதிகள் நெடுஞ்சாலை துறை மூலம் அகற்றப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அரசின் அறிவிப்பு நகலை சம்பந்தப்பட்ட கடைக்காரர்களிடம் இன்று நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்ட பொறியாளர் மோகனா, உதவி கோட்ட பொறியாளர் பிரேம் சங்கர், கிராம நிர்வாக அலுவலர் மந்திர சூடாமணி மற்றும் அலுவலர்கள் நேரில் வழங்கினார்கள்.
பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலையின் அகலம் சுமார் 12 அடியும் , வடிகால் அகலம் 4 ½ அடியும் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்,
