• June 8, 2025

தடுப்பு சுவரில் கார் மோதியதில் 8 பேர் காயம்

 தடுப்பு சுவரில் கார் மோதியதில் 8 பேர் காயம்

கோயம்புத்தூரிலிருந்து திருநெல்வேலி தச்சநல்லூர் நோக்கி ஒரு சென்றது, அந்த காரில் 4 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் இருந்தனர். காரை பாக்கியராஜ் என்பவர் ஓட்டி வந்தார்.

இன்று 15.7.2023 காலை 7.மணியளவில் கோவில்பட்டி எல்லையில் நான்குவழி சாலையில் கார் வந்த போது  மூப்பன்பட்டி விலக்கு அருகில் டிரைவரின் கட்டுப்பட்டில் இருந்து விலகிய கார் தாறுமாறாக ஓடி இடது புற தடுப்பு சுவரில் மோதி சர்வீஸ் ரோட்டுக்கு  வந்து நின்று விட்டது.

இந்த விபத்தில் காரின் ஒரு பக்கம் பலத்த சேதம் அடைந்தது. காரில் இருந்த அனைவருக்கும் காயம் ஏற்பட்டது. இதில் அபிராமி (வயது18) என்ற பெண் பலத்த காயம் அடைந்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், காயம் அடைந்த அனைவரையும் மீட்டு 108ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *