அழகுமுத்துக்கோன் சிலைக்கு தே.மு.தி.க.வினர் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் 313-வது பிறந்த நாளை முன்னிட்டு கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் அழகுமுத்துகோன் திருஉருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார் மாநில மாணவரணி துணைசெயலாளர் சண்முகசுந்தரம், மாநில மகளிரணி துணைசெயலாளர் சுபப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்ட அவைத்தலைவர் கொம்பையாபாண்டியன்,மாவட்ட துணைசெயலாளர் மாரிச்செல்வம், செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், ஒன்றியசெயலாளர் கயத்தார் மேற்கு நடராஜன்,கிழக்கு அருண்,கயத்தார் நகரசெயலாளர் கண்ணண், கோவில்பட்டி நகரசெயலாளர் நேதாஜிபாலமுருகன் மற்றும் பலர் மாலை அணிவிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
