• June 8, 2025

அழகுமுத்துக்கோன் 313-வது பிறந்தநாள் விழா, மணிமண்டபத்தில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை                                                                                                

 அழகுமுத்துக்கோன் 313-வது பிறந்தநாள் விழா, மணிமண்டபத்தில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை                                                                                                

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் 313-வது பிறந்தநாள் விழா அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி  கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள அவரது  மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் .செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன், ,கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

மேலும். கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜெயா ,கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி,கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் ,கயத்தார் வட்டாட்சியர் .நாகராஜன் ,கட்டாலங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் .டி.ஜேபிஆர்.தம்பா ,வீரன் அழகுமுத்துக்கோன் வாரிசுதாரர்கள் .மீனாட்சி, .ராஜேஸ்வரி,ராணி,வனஜா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகளை சேர்ந்தவர்கள் தனித்தனியாக வேன்களில் மணிமண்டபம் சென்று அழகுமுத்துகோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். வேன்களில் செல்லும்போது இளைஞர்கள் குரல் எழுப்பியபடி சென்றனர்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *