• June 8, 2025

மாணவர்களுக்கான கலை, இலக்கிய போட்டிகள்

 மாணவர்களுக்கான கலை, இலக்கிய போட்டிகள்

தமிழ்நாடு காமராஜர் பேரவையின் ஒருங்கிணைப்பில் வருகிற 15ம் தேதி கர்மவீரர் காமராஜர் 121வது பிறந்தநாள் விழா கல்வித்திருவிழாவாக கொண்டாடப்பட உள்ளது. விழாவை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை) பள்ளி மாணவர், மாணவிகளுக்கான கலை மற்றும்  இலக்கியப் போட்டிகள் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றன.

6 முதல் 12ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் கவிதைப்போட்டிகள் நடத்தப்பட்டன இந்த போட்டிகளில் 25 பள்ளிகளின் சார்பாக 220 மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.

நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ப.ஜான்கணேஷ் போட்டியை  தொடங்கி வைத்தார். தமிழ்நாடு காமராஜர் பேரவையின் தலைவர் தா.நாஞ்சில் குமார், இயக்குனர் க.தமிழரசன், விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ஆ.சம்பத்குமார்,  அனைத்து மருத்துவ மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் கா.கருப்பசாமி, ஜெய் கிறிஸ் அறக்கட்டளையின் வழக்கறிஞர் ஜெயஶ்ரீ கிறிஸ்டோபர், காமராஜர் பேரவையின் கோவில்பட்டித் தொகுதி பொறுப்பாளர் பா.அசோகன் ஆகியோர் போட்டிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *