கோவில்பட்டி: அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு

கோவில்பட்டி புதுக்கிராமம் ஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சி குழுவின் சார்பில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசும்,உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும்,மாணவர்களுக்கு உயர் கல்விவழிகாட்டுதல் நிகழ்ச்சியும்,ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
கோவில்பட்டி இல்லத்தார் நடுநிலைப் பள்ளியில் நடந்த 13ம் ஆண்டு பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி இல்லத்தார் சமுதாய சங்கத் தலைவர் சங்கரன் தலைமை வகித்தார்.ஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சி குழு பொருளாளர் இன்ஜினியர் மாரிக்கண்ணன் முன்னிலை வகித்தார்.
கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ்,இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியை முருக சரஸ்வதி,பொதுநல மருத்துவமனை மருத்துவர் வேலம்மாள்,துணை வட்டாட்சியர் பொன்னம்மாள்,பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன்,ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினர்

இந்நிகழ்ச்சியில்இல்லத்தார் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் பாரதி,நிர்மலா, சித்ரா, கலைஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சி குழு நிர்வாகிகள்வெங்கடேஸ்வரன்,கோமதி சங்கர்,ஜெயக்குமார்,கோபாலகிருஷ்ணன், தினேஷ் பாலாஜி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடக்கத்தில் ஸ்ரீ நாராயணகுருகல்வி வளர்ச்சி குழு செயலாளர் சங்கர் அனைவரையும் வரவேற்றார்.முடிவில் ஆலோசகர் திருப்பதி கணேசன் நன்றி கூறினார்.
