இலவச கண் பரிசோதனை முகாம்

கோவில்பட்டி புத்துயிர் ரத்ததான கழகம், மக்கள் நலம் அறக்கட்டளை, ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள் யாக சங்கமம் டிரஸ்ட், கிருஷ்ணன் கோயில் சங்கரா கண் மருத்துவமனை, தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவை சார்பில் கோவில்பட்டி ஆயிர வைசிய தொடக்க பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு புத்துயிர் ரத்ததான கழகச் செயலாளர் கா தமிழரசன் தலைமை தாங்கினார். ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள் யாக சங்கமம் பொன்னுத்துரை முன்னில வைத்தார். இந்திய கலாச்சார நட்புறவுக் கழக மாவட்ட துணைத் தலைவர் முத்துச்செல்வம் முகாமினை துவக்கி வைத்தார்.
முகாமில் கலந்து கொண்ட 80 பேருக்கு கண் விழி பரிசோதகர் ஆனந்தி கண் பரிசோதனை செய்தார். 18 பேர் மேல் சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
முகாமில் நடராஜபுரம் தெரு பொதுமக்கள் நலவாழ்வு இயக்க தலைவர் செண்பகம், லட்சுமணன், ஐஎன்டிசி மாவட்ட பொது செயலாளர் ராஜசேகர், ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள் யாக சங்கமம் டிரஸ்ட் நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, சண்முகையா, ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

,
