கோவில் விழாவில் அன்னதானம்
கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் அமைந்துள்ள ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயிலில் முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
அதைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோவில் பிரகாரம் வழியாக எடுத்து வந்து கோபுர கலசத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் 21 அபிஷேக சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இந்த பூஜைகளை அர்ச்சகர்கள் பார்த்தசாரதி, பாலாஜி ஆகியோர் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.மாநில அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகர அவைத் தலைவர் அப்பாசாமி, நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ் மற்றும் விழா கமிட்டியாளர் தலைவர் வாசுதேவன், துணைத் தலைவர் குருநாதன், செயலாளர் செல்வம், துணைச் செயலாளர் பால கணேஷ், பொருளாளர் ராஜ் என்ற மாரியப்பன், செயல் தலைவர்கள் ரவி, ராமானுஜம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.