கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உயிர்காக்கும் மருந்துகள் ; இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

கோவில்பட்டி இ.எஸ்.ஐ.மருத்துவமனை அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.தாலுகா செயலாளர் சரோஜா தலைமை தாங்கினார்.நகர துணை செயலாளர்கள் முனியசாமி, அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணை செயலாளர் ஜி.பாபு, நிர்வாக குழு சேது ராமலிங்கம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். மாவட்ட குழுவை சேர்ந்த பரமராஜ், செல்லையா, ரஞ்சனி கண்ணம்மா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்திய கோரிக்கைகள் விவரம் வருமாறு:-
*வட்டாட்சியர் அலுவலகத்தில் பெயர் மாற்றம், சான்று போன்றவற்றுக்கு லஞ்சம் வாங்குவது தவிர்க்கப்பட வேண்டும்.
*கோவில்பட்டி தாலுகாவில் உள்ள தகுதியான ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கி கிராம கணக்கில் பதிவு செய்ய வேண்டும்.
* கோவில்பட்டி ரெயில்வே ஸ்டேசனில் இருந்து லட்சுமி மில் மேம்பாலம் இடையே மெயின் ரோட்டில் இலவச நவீன கழிப்பிடம் நகராட்சி மூலம் கட்டித்தர வேண்டும்.
*கோவில்பட்டி மாவட்ட மருத்துவமனைக்கு உயிர்காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும்.
*கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பெண்கள் கழிப்பறையில் கதவு இல்லை. அதை பொருத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
*கோர்ட்டு வளாகத்தில் மூடிக்கிடக்கும் கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன
