போலீஸ் மைதானத்தில் மாணவர்கள் யோகா

விவேகானந்த கேந்திரம் கன்னியாகுமரி கோவில்பட்டி கிளை சார்பாக உலக யோகா தினம் இன்று போலீஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை வழக்கறிஞர் சந்திரசேகர் திருவிளக்கு ஏற்றி தலைமை தாங்கி தொடக்கி வைத்தார்கள்.கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியை.இந்திராணிவாழ்த்துரை வழங்கினார்கள்.
வழக்கறிஞர் .மோகன்தாஸ், தநாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு வழிநடத்தினார்கள்.இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களும்,கோவில்பட்டி வ.உ.சி.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் மொத்தம் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டார்கள் கேந்திர பொறுப்பாளர் பரமகுரு என்ஜினீயர் ரமேஷ்குமார் ஆகியோர் யோகா பயிற்சியை செய்து காட்டினார்கள்.கேந்திர சகோதரி ஜெயலட்சுமி நன்றி கூறினார்..

