• June 8, 2025

மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு  நிகழ்ச்சி

தூத்துக்குடி நேரு யுவ கேந்திரா, பாண்டவர்மங்கலம் கஸ்தூரிபாய் காந்திஜி மகளிர் நற்பணி மன்றம் இணைந்து மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் பொது அறிவு வினாடி வினா நிகழ்ச்சியை நடத்தின.

இந்நிகழ்ச்சிக்கு நேரு யுவ கேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் ஞானச்சந்திரன் தலைமை தாங்கினார். பாண்டவர்மங்கலம்  கஸ்தூரிபாய் காந்திஜி மகளிர் மன்றத்தின் கவுரவ ஆலோசகர் விஜயன் அனைவரையும் வரவேற்றார். மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சிக்கு கருத்தாளர்களாக தூத்துக்குடி ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், தெற்கு திட்டங்குளம் மகளிர் நற்பணி மன்ற தலைவி ரஞ்சித மணி கஸ்தூரிபாய் காந்திஜி மகளிர் நற்பணி மன்ற தையல் ஆசிரியர் சித்திரை பூபதி மற்றும் பாண்டவர்மங்கலம் ஓய்வு பெற்ற நூலக அலுவலர் சவுந்தர் , மகளிர் மன்ற நிர்வாக குழு உறுப்பினர் ஜீவா ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள்.

மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு உறுதிமொழி அனைவராலும் ஏற்கப்பட்டது. பங்கேற்பாளர்களுக்கு இடையில் வினாடி வினா நிகழ்ச்சி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. மழைநீர் சேகரிப்பு பற்றிய பிரசுரங்கள் ஸ்டிக்கர்ஸ் அனைத்து பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டது. பாண்டவர்மங்கலம் கிராமத்தில் பொது இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்  நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர் ,மகளிர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.  முடிவில்  கஸ்தூரிபாய் காந்திஜி மகளிர் நற்பணி மன்ற தலைவி அமுதா நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *