• June 8, 2025

அஞ்சலகங்களில் தங்கப்பத்திரம் 5 நாள் விற்பனை தொடக்கம்

 அஞ்சலகங்களில் தங்கப்பத்திரம் 5 நாள் விற்பனை தொடக்கம்

மத்திய அரசு தங்கப்பத்திரம் திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. தங்கப்பத்திரம் விற்பனை, அஞ்சலகங்கள் மூலமாக இன்று (19-ந்தேதி) தொடங்கியது. வருகிற 23-ந் தேதி வரை 5 நாட்கள் தங்கப்பத்திரம் விற்பனை நடைபெறுகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 5926 ஆகும். கோவில்பட்டி கோட்டத்தில் கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி தலைமை தபால் நிலையங்களிலும், அனைத்து துணை தபால் நிலையங்களிலும் தங்கப்பத்திரம் விற்பனை நடைபெறும்.

தங்கம்,பத்திர வடிவில் இருப்பதால் பாதுகாப்பாக இருக்கும். தனி நபர் ஒரு நிதி ஆண்டுக்கு குறைந்த பட்சம் ஒரு கிராம் முதல் அதிக பட்சம் 4 கிலோ வரை வாங்கலாம், மேலும் முதலீட்டு தொகைக்கு 2.5 சதவீதம் வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து முதிர்வடையும் நாளில் அன்றுள்ள தங்கத்தின் விலைக்கு நிகரான பணமும் கிடைக்கும். தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு இது மிக சிறந்த வாய்ப்பாகும்

பூர்த்தி செய்யப்பட்டத விண்ணப்பத்துடன்  பான்கார்டு கட்டாயம் தேவை. அதனுடன் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் இவற்றில் ஏதாவது ஒன்றின் நகல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்  ஆகியவற்றை கொடுத்து தங்கபத்திரத்தை பெற்றுகொள்ளலாம்.

பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சு,சுரேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு அஞ்சல் விற்பனை பிரதிநிதிகளை கீழ்க்கண்ட எண்களில்  79044420532, 9944108517 தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்து உள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *