• June 8, 2025

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

 அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

அமலாக்க துறையினரால்  கைதாகி இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து அறிய 5 டாக்டர்கள் கொண்ட குழுவை அமலாக்கத்துறை அமைத்தது இம்மருத்துவக்குழு தரும் அறிக்கையை வைத்து அமலாக்கத்துறை அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும்.
வரும் 28-ம் தேதி வரை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனையில் விசாரணை நடத்திய நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரித்துவிட்டு, மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார் சென்னை முதன்மை நீதிமன்ற அமர்வு நீதிபதி அல்லி.

நீதிபதி அல்லி அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க அமலாக்கத்துறை சார்பில் நீதிபதி அல்லியிடம் வலியுறுத்தினர். அமைச்சருக்கான அறுவை சிகிச்சையின் அவசியம் குறித்து தி.மு.க. வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து செந்தில்பாலாஜி உடல்நிலை குறித்து விசாரிக்கவே மருத்துவமனைக்கு வந்ததாக நீதிபதி அல்லி தெரிவித்தார். வாதங்களை நீதிமன்றத்தில் வைத்துக்கொள்ள இரு தரப்புக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி அறிவுரை வழங்கினார்

செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்த நிலையில், தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்படவுள்ளார். எப்போது, எங்கு அறுவை சிகிச்சை செய்யலாம் என குடும்பத்தினருடன் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ள நிலையில் அங்கு காவல்துறை அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். 

செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரிப்பதற்காக, சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை அமர்வில் இருந்து நீதிபதி சக்திவேல் விலகிய நிலையில் புதிய அமர்வு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை, அபிராமிபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் உதவியாளர் கோகுல்ராஜ்க்கு சொந்தமான 2 வீடுகளுக்கு வருமானவரி துறையினர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

செந்தில்பாலாஜி காவலில் வைக்கப்படும் நிலையில் அவர் வகித்து வரும்  மின்சார துறையை தங்கம் தென்னரசுவிற்கும் மதுவிலக்கு ஆயதீர்வுதுறையை  ஐ பெரியசாமிக்கும் கூடுதல் பொறுப்பாக கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *