• June 8, 2025

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

 அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

அ.தி.மு.க. தலைமைக்கழக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அ.தி.மு.க. பொதுசெயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலமையில் , அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது,

மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள், பிற மாநில கழக செயலாளர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் கழகத்தில் ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்கலின் பதிவை புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்களை செர்த்தளுக்கான பணிகளை மேலும் விரைவுபடுத்துவது குறித்தும் வருகிற 20-ந்தேதி அண்டு மதுரையில் நடைபெற உள்ள கழக மாநாட்டை எழுச்சியுடன் நடத்துவது சம்பந்தமாகவும் கழக பணிகளை விரைந்து ஆற்றுவது குறித்தும் கழக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி விரிவாக ஆலோசனை வழங்கினார்.

மேலும் இக்கூட்டத்தில் ஜெயலலிதா வின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *