தி.மு.க.போல உதட்டளவில் இல்லாமல்,உணர்வுபூர்வமாக இஸ்லாமியர்களை மதிக்கின்ற இயக்கம் அ.தி. மு. க.-டி. ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார், சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது :-
கண்ணியத்திற்குரிய அண்ணல் காயிதே மில்லத்தின் 128 வது பிறந்த தினவிழா அரசின் சார்பிலே கொண்டாடப்பட்டுவருகிறது.அரசின் சார்பிலே என்று சொல்லும்போது அவரின் பிறந்தநாளை அரசின் சார்பில் கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டவர் அம்மா.
காயிதே மில்லத்தின் நுற்றாண்டுவிழா கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றபோது அப்போது நானும் அமைச்சராக இருந்தேன். அப்போது அங்கு இருந்த இஸ்லாமிய பெரியோர்கள் அம்மாவிடத்திலே காயிதே மில்லத்தின் பிறந்தநாள் விழா, அரசு விழாவாக கொண்டாடப்படவேண்டும் என்று சொன்னபோது உடனடியாக அந்த மேடையிலே அரசு விழாவாக கொண்டாடப்படவேண்டும் என்று உத்தரவிட்டு அதற்கான உத்தரவை போட்டவர் அம்மா.
அதன் அடிப்படையில்தான் இன்றைக்கும் அரசின் சார்பிலே நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதேபோல மணிமண்டபம் அமைப்பதற்கு உத்தரவிட்டார். இஸ்லாமியர்களின் கோரிக்கையை ஏற்று அந்த மேடையிலேயே அம்மா அறிவித்தார்.அதுவும் கட்டி முடிக்கப்பட்டது. உலமாக்கள் பென்சனில் காத்திருப்போர் பட்டியலில் யாரும் இருக்ககூடாது என்று உலமாக்களின் பென்சனைக்கூட உயர்த்தி கொடுத்து அதன் அடிப்படையில் அனைவருக்கும் அளித்தார். அந்த வகையில் இஸ்லாமியர்களின் உற்ற தோழனாக,உற்ற நண்பனாக,உணர்வு பூர்வமாக,தி.மு.க.போல உதட்டளவில் இல்லாமல்,உணர்வுபூர்வமாக இஸ்லாமியர்களை மதிக்கின்ற இயக்கம் அ.தி. மு. க.தான். இஸ்லாமியர்களுக்கு பல்வேறு வகைகளில் அம்மாவும்,அதனை தொடர்ந்து எடப்பாடியாரும் அனைத்து நன்மைகளையும் செய்தார்.
இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு
கேள்வி :- மதுபானத்தில் பாசி இருந்த விவகாரம் தொடர்பாக…
பதில்:- தமிழகத்தை பொறுத்தவரை ஒரு போதை மாநிலம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு கஞ்சா,அபின்,கள்ளச்சாராயம்., சர்வசாதரணமாக கிடைக்கின்றது.தமிழகம் போதை பொருட்களின் ஸ்தலமாக இருக்கும் காரணத்தினால்தான் போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக கொண்டுவரப்படுகின்ற நிலைமை உள்ளது. டாஸ்மாக் மதுபானம் அருந்தி இறக்கும் நிலை உள்ளது.தஞ்சாவூரில் இருவர் இறந்துள்ளார்கள்.தற்போது டாஸ்மார்க் மீதே நம்பிக்கை இழக்கும் நிலை உள்ளது. அரசு மதுபான கடையில் விற்கப்படும் மது அச்சம் தரும் நிலை இருக்கின்றது என்றால் எந்த அளவுக்கு மதுபானங்களில் கலப்படம் உள்ளது என்று தெரிந்துகொள்ளலாம்.
அதுபோல கள்ளச்சாராய சாவுகள். அரசு மதுபானங்களை சாப்பிட்டு இறந்துபோகும் நிலை இருக்கின்றது என்றால் இதற்கு விடியா திமுக அரசு பொறுப்பேற்கும் நிலை உள்ளது.இதுபோன்ற நிகழ்வு இந்தியாவில் எங்கும் கிடையாது.தமிழகத்தில்தான் கள்ளச்சாராய மரணங்கள்,டாஸ்மார்க் மரணங்கள் ஏற்படுகிறது.டாஸ்மார்க் மதுபானத்தை குடித்து சுருண்டு விழுந்து இறந்துவிடுகிறார்கள்.இது ஒரு புரியாத புதிராக உள்ளது.
இதன் மீது குற்றச்சாட்டு வராத அளவுக்கு பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் கடமை. அப்படி இல்லாமல் தஞ்சாவூரில்,மதுரையில் சுருண்டு விழுந்து இறந்துவிடுகிறார்கள் என்றால் இதற்கு பதில் சொல்லவேண்டிய பொறுப்பு விடியா அரசுக்கு உண்டு.
கேள்வி:- ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக மத்திய மந்திரி பதவி விலகவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளதே
பதில்:- நாட்டையே உலுக்கிய சம்பவம் தொடர்பாக கழகத்தின் சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருத்தத்தை தெரிவித்துள்ளார்.தற்போது இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக உண்மை வெளியே வரட்டும்.
தமிழகத்திலிருந்து சென்றவர்கள் விபத்து நடந்த இடத்தை பார்த்தார்களா? உதயநிதியும், சிவசங்கரும் சம்பந்தபட்ட இடத்திற்கு போகவில்லையே. ஒரு முதலமைச்சரின் மகன்,அதிகாரம் படைத்தவர்.அவர் இதுபோன்ற காரணத்தை சொல்லலாமா?
இது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். சுற்றுலா சென்றுவந்தது போல கூலிங்கிளாஸ் போட்டு வருகிறார். துயர சம்பவத்திற்கு போகும்போது இது தேவையில்லாத விஷயம். சூட்டிங் போவதுபோல ஒரு சுற்றுலாவுக்கு சென்றுள்ளார். 170 பேர் பொதுபிரிவில் பயணித்துள்ளார்கள். முன்பதிவு செய்தவர்களின் தகவல் தெரிந்துள்ளது. முன்பதிவு இல்லாமல் பயணம் செய்தவர்களின் நிலை குறித்து உறுதிபடுத்தவேண்டிய பொறுப்பு யாருடையது. முழுமையாக விசாரணை செய்து ரிப்போட் அளிக்காமல் முந்திரி கொட்டை போல விமான நிலையத்தில் பேசுகிறார். அரசின் சார்பில் முழுமையான அறிக்கை அளிக்கவேண்டும்.யார் யார் எல்லாம் சென்றார்கள்.அவர்களின் தற்போதைய நிலை என்ன என்று தெரிவிக்கவேண்டும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்
