• June 7, 2025

கோவில்பட்டியில் சிலம்ப வீரர், வீராங்கனைகளுக்கு 2ம் ஆண்டு கச்சை கட்டும் விழா

 கோவில்பட்டியில் சிலம்ப வீரர், வீராங்கனைகளுக்கு 2ம் ஆண்டு கச்சை கட்டும் விழா

கோவில்பட்டி சவுபாக்யா திருமண மஹாலில் இன்டர்நேஷனல் சிலம்பாட்ட சாலை சார்பில் மாவட்ட சிலம்பம் வீரர் வீராங்கனைகளுக்கு 2ம்  ஆண்டு கச்சை கட்டும் விழா நடைபெற்றது. சிலம்பாட்ட பயிற்சியாளர் சோலை நாராயணசாமி தலைமையில் தேசிய நடுவர் பாண்டியன், பயிற்சி பெற்ற மாணவர்களுக்கான பெல்ட்கள் தேர்வு செய்தார்.

சிறப்பு  அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சிலம்ப கலையை ஆர்வமுடன் கற்றுக்கொண்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு கச்சையை கட்டி விட்டு சிலம்பம் வீரர் வீராங்கனைகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து சிறப்புரை ஆற்றினார்.

79 பேருக்கு மஞ்சள், 12 பேருக்கு ஆரஞ்ச், 6 பேருக்கு பச்சை, ஒருவருக்கு ஊதா கச்சையை கட்டி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. முன்னதாக பள்ளி மாணவ மாணவிகள் சிலம்பாட்டம் குறித்து  கலையை வெளிப்படுத்திய விதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இவ்விழாவில் சித்த மருத்துவர் முகம்மது ஜக்காரியா, பயிற்சியாளர் மாரியப்பன், சூரியநாராயணன்,திருவள்ளுவர் மன்ற துணை தலைவர் திருமலை முத்துச்சாமி, பயிற்சியாளர்கள் காயத்ரி, நல்லதம்பி,சிவசக்திவேல் முருகன், மணிராஜ், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர் அன்புராஜ், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி மற்றும் மாணவ மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *