கோவில்பட்டி அருகே கூசாலிபட்டியில் கபடி போட்டி

கோவில்பட்டி அருகே கூசாலிபட்டியில் ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு ஏ.எம்.சி.ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் 4வது ஆண்டு கபடி போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. போட்டியில் கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன, மின்னொளி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியை காண கிராம மக்கள் திரண்டு வந்திருந்தனர்.

இந்த போட்டியில் திருவந்தம்பட்டி மகேஸ்வரன் அணிக்கு முதல் பரிசு கிடைத்தது. கூசாலிபட்டி ஏ.எம்.சி.அணி 2-வது இடத்தையும் , தாமஸ் நகர் மதன் அணி 3-வது இடத்தையும் எட்டையபுரம் அரவிந்த் அணி 4 வது இடத்தையும், ஆலம்பட்டி அணியினர் 5-வது இடத்தையும் பெற்றனர்.
. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவின் போது போட்டியில் முதல் 5 இடம் பிடித்த வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்க்கப்பட்டன
