• June 8, 2025

கோவில்பட்டி அருகே மாட்டு வண்டி பந்தயம்; வெற்றியாளர்களுக்கு ரொக்கப்பரிசு

 கோவில்பட்டி அருகே மாட்டு வண்டி பந்தயம்; வெற்றியாளர்களுக்கு ரொக்கப்பரிசு

கோவில்பட்டி அடுத்த துறையூர் வெயிலுகந்தம்மன் கோவில் சித்திரை பொங்கல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

பெரிய மாடு, சின்ன மாடு என்ற அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன, இந்த போட்டியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். பந்தயத்தில்  எராளமான மாட்டு வண்டிகள் பங்கேற்றன,. பெர்ய மாட்டு வண்டிகள் எல்கை தூரம் 10 மெயில் எனவும், சின்ன மாட்டு வண்டிகள் எல்கை தூரம் 6 மைல் எனவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

போட்டி தொடக்கத்தில் இருந்து இறுதி வரை சாலையின் இருபுறமும் மக்கள் கூடி இருந்து மாட்டு வண்டி பந்தயத்தை கண்டு களித்தனர். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் முந்திசென்ற காட்சி பார்ப்பதற்கு விறுவிறுப்பாக இருந்தது. போட்டி முடிவில் வெற்றியாளர்களை பொதுமக்கள் பாராட்டினார்கள்.

பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் பரிசு  பெற்றவருக்கு ரூ.4௦,001 இரண்டாமிடம் பெற்றவருக்கு ரூ.35,001 மூன்றாம் இடம் பிடித்தவருக்கு ரூ.,30,001,நான்காம் இடம் பிடித்தவருகுக் ரூ.5001 வீதம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

இதேபோல் சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் முதலிடம் பெற்றவருக்கு ரூ,30,001, இரண்டாமிடம் பெற்றவருக்கு ரூ.25,001,மூன்றாம் இடம் பிடித்தவருக்கு ரூ.20,001,நான்காம் இடம் PIDITTHVARUKKIU ரூ. 5,001 வீதம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *