• June 8, 2025

பிளஸ்-2 சாதனை மாணவிக்கு தங்கபேனா பரிசளித்து வைரமுத்து பாராட்டு

 பிளஸ்-2 சாதனை மாணவிக்கு தங்கபேனா பரிசளித்து வைரமுத்து பாராட்டு

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரை நடந்தது. இதற்கான தேர்வு முடிவு நேற்று வெளியானது. பிளஸ்-2 தேர்வில் 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

பிளஸ்-2 தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளியான, திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி வரலாற்று சாதனை படைத்துள்ளார். அதாவது தமிழ் உள்பட அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்களை எடுத்து அவர் மாநில அளவில் முதலிடத்தை பிடித்து இருக்கிறார்.

இதனிடையே, 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ள மாணவி நந்தினிக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், அண்மையில் நான்பெற்ற தங்கப் பேனாவை தங்கை நந்தினிக்கு பரிசளிக்கிறேன் என கூறி இருந்தார். அதன்படி, இன்று திண்டுக்கல்லில் உள்ள மாணவியின் வீட்டிற்கு சென்ற அவர், மாணவிக்கு தங்கப்பேனாவை நேரில் பரிசளித்து வாழ்த்தினார்.

வைரமுத்து நிருபர்களிடம் கூறுகையில்,” ஏழை குடிசையின் கல்வி என்ற தீபம் உச்சம் நோக்கி எரியும் என்பதற்கு நந்தினி ஒரு எடுத்துக்காட்டு என்று தெரிவித்தார்


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *