எம்.ஜி.ஆர்.நடித்த `உலகம் சுற்றும் வாலிபன்’ 50 ஆண்டுகள் நிறைவு: இனிப்பு வழங்கி டி. ஜெயக்குமார் கொண்டாட்டம்

எம்ஜிஆர் நடித்து வெளிவந்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் ஐம்பது ஆண்டுகள் நிறைவை ஒட்டி சென்னை ராயபுரம் தொகுதியில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டையில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டு அதிமுக கொடி ஏற்றி வைத்து எம் ஜி ஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:
ஆளுங்கட்சியாக திமுக இருந்த போது உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியாகாமல் இருப்பதற்கு பல தடங்கல்களை தந்தனர் அதனையும் மீறி படம் வெளியாகி வெற்றிப்படமாக அமைந்தது
போஸ்டர் ஓட்டினால் கிழிப்பேன் என திமுக வினர் தெரிவித்தனர் போஸ்டர் ஒட்டாமல் வெற்றி படமாக அமைந்த ஒரே படம் உலகம் சுற்றுப் வாலிபன் படம் தான்
தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் எம்ஜிஆர் மட்டும்தான் சூப்பர் ஸ்டார்.. உலகம் சுற்றும் வாலிபன் வெளிவந்த பிறகு அதிமுக பல்வேறு வெற்றிகளை பெற்றது. திண்டுக்கல் தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது
பால்வளத் துறை அமைச்சர் நாசருக்கு பால் ஊற்றி விட்டனர் தமாஷ் தர்பார் கூட்டத்தில் இன்னும் சிலர் இருக்கிறார்கள்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது பிடிஆர் போல பொருளாதார வல்லுநர் இல்லை என தெரிவித்தனர் அறிவும், ஆற்றலிலும் சிறந்தவர் பிடிஆர் என்று புகழாரம் சூட்டினர். இப்போது அவருக்கு அறிவும் ஆற்றலும் இல்லையா ?
ஆடியோ வெளியாகியது, 30 ஆயிரம் கோடி ஊழல் என பேசியது உண்மையாக தான் இருக்கும் ஆடியோ வெளியானதால் தான் அமைச்சர் பொறுப்பு மாற்றப்பட்டுள்ளது என முதல்வரே உறுதி படுத்துவதாக தான் உள்ளது
முதல்வரும், பி.டி.ஆரும் விளக்கம் கொடுத்தாலும் டம்மியாக தான் இப்போது வைக்கப்பட்டிருக்கிறார்
ஜமின்தார் முறையில் திமுகவில் பொறுப்பு வழங்கப்பட்டு வருகிறது தனக்கு பின்னால் உதயநிதி ஸ்டாலின் வரவேண்டும் என்பதற்காகவே அதற்கேற்றார் போல் முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
பி.டி.ஆர்., ஆவடி நாசர் ஆகியோரை அ.தி.மு.க. விற்கு வாருங்கள் என்று அழைப்பு விடுக்கவில்லை, ஆனால் வந்தால் அங்கீகரிப்போம்.
இவ்வாறு டி.ஜெயக்குமார் தெரிவித்தார்
