கோவில்பட்டி இ.பி. காலனி எஸ். எஸ். டி. நகர் பகுதியில் எரியாத மின்விளக்குகள்; பா.ஜனதா புகார்

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் பா,ஜனதா ஊடகபிரிவு பொறுப்பாளர் அம்மன் மாரிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கோவில்பட்டி இபி காலனி எஸ் எஸ் டி நகர் 2வது தெரு இரண்டாவது போஸ்டிலும் மூன்றாவது போஸ்டிலும் மின்விளக்குகள் எரியவில்லை என பொதுமக்களின் குற்றச்சாட்டு வார்டு மெம்பர் வரவில்லை வார்டு மெம்பரை தெரியாது என்று கூறி விட்டார்கள்
இது பற்றி மின்வாரிய லைன் மேனிடம் கேட்ட;போது பஞ்சாயத்து தலைவரிடம் முறையிடுங்கள் என்று கூறி விட்டார். அடுத்த வார்டு உறுப்பினர் மூலமாகவும் தகவல் சொல்லியும் இதுவரை நடவடிக்கை இல்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மக்தியில் உள்ளது.

எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இரண்டாவது மற்றும் மூன்றாவது போஸ்ட் மின்விளக்குகளை சரி செய்து இருளில் மூழ்கி கிடக்கும் எஸ் எஸ் டி நகர் பொதுமக்களை காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்
இவ்வாறு அம்மன் மாரிமுத்து கூறி உள்ளார்.
