கோவில்பட்டி அறிஞர் அண்ணா நகர் கோவில் விழா: பக்தர்கள் முளைப்பாரி-அக்னிச்சட்டி ஊர்வலம்

கோவில்பட்டி அறிஞர் அண்ணா நகரில் உள்ள காட்டு நாயக்கர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட காளியம்மன், மாரியம்மன்,.சக்தி விநாயகர், கருப்பசாமி, முத்துமாரியம்மன், வைரவசாமி கோவில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.
கடந்த 2-ந் தேதி காலை கொடிக்கால் நடுதல் நடைபெற்றது. மாலையில் வடக்கத்தி அம்மனுக்கு பூஜை நடந்தது/. தொடர்ந்து 8-ந் தேதி திருவிளக்கு பூஜையும், கும்மியாடல் நிகழ்ச்சியும் நடந்தது,.

9-ந் தேதி காலை செண்பகவல்லி அம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல் நடந்தது. தொடர்ந்து திருவள்ளுவர் இளைஞர் அணி சார்பில் அன்னதானம் நடைபெற்றது. மேலும் அக்னிச்சட்டி எடுத்து வலம் வருதல், செண்பகவல்லி அம்மன் கோவிலில் இருந்து கும்பம் எடுத்து வலம்வருதல் நடந்தது. அதனை தொடர்ந்து பூக்குழி இறங்குதல் நள்ளிரவுக்கு மேல் சாமக்கொடை நடந்தது.
பின்னர் நேற்று 10-ந் தேதி மாலை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பெண்கள் முளைப்பாரி சுமந்து ஊர்வலம் சென்றனர். ஆண்கள் சிலர் பிரமாண்ட எடை கொண்ட முளைப்பாரியை சுமந்து சென்றது பிரமிக்க வைத்தது.
சில பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து வலம் வந்தனர். இரவில் கலை நிகழ்ச்சி மற்றும் செண்டை மேள இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

