கோவில்பட்டி தரைப்பாலத்தின் இருபுறமும் அணுகு சாலை அமைக்க தாமதம் செய்வதாக புகார்

கோவில்பட்டி தாசில்தார் அலுவலக வாசலில் இன்று காலை ஐந்தாவது தூண் அமைப்பிஞ் நிறுவனத்தலைவர் எ.சங்கரலிங்கம் என்பவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவருடன் அதிகாரிகள் பேச்சு நடத்தினார்கள். அப்போது தந்து கோரிக்கை பற்றிய மனுவை அளித்தார். அந்த்ச மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள தரைப்பாலத்திற்கு இருபுறமும் அணுகு சாலை அமைக்க வேண்டுவது தொடர்பாக பல கோரிக்கைகள் மற்றும் அறவழி போராட்டங்கள் நடத்தியதன் தொடர்பாக வருவாய்துறை அதிகாரிகள் பேரு முயற்சி ,மேற்கொண்டனர்.
மேற்படி அனுகுசாலை போட வேண்டிய நிலம் மற்றும் கட்டிடங்களுக்கு இழப்பீடு ஒதுக்கப்பட்டு சுமார் 80 சதவீதம் பேர் இழப்பீடு பெற்று விட்டதாகவும் 2022 டிசம்பர் முதல் வாரத்தில் மேற்படி இடத்தில் உள்ள கட்ட்டிடங்கள் அகற்றப்பட்டு மக்கள் பயன்பாடுக்கு அர்ப்பணிக்கப்படும் என்றும் எழுத்துப்பூர்வமாக செயற்பொறியாளர் (நபார்டு) மூலம் உறுதி அளிக்கப்பட்டது.

ஆனால் இது வரை சுமார் 25 சதவீத ஆக்கிரமிப்புகள் கூட நெடுஞ்சாலை துறையால் அகற்றப்படவில்லை; நெடுஞ்சாலை உதவி பொறியாளர் சாலை போடுவதற்கான எப்பணியும் தொடங்கப்படவும் இல்லை; நீதிமன்றத்தை காரணம் காட்டப்படுகிறது.
எந்த நீதி ,மன்றத்திலும் எவ்வித தடையும் உள்ளதாக தெரியவில்லை. நீதிமன்றத்தை காரணம் காட்டி ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போவதாகவே தெரிய வருகிறது.
இதற்கிடையே நெடுஞ்சாலை துறைக்கு பாத்தியப்பட்ட இடத்தில் ஆக்கிர,மித்து கட்டப்பட்ட கட்டிடத்திற்கு நகராட்சி வரி விதிப்பு செய்யாதநிலையில் கோவில்பட்டி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின் இணைப்பு வழங்கி மேற்படி ஆக்கிரமிப்புக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளது. இது அணுகு சாலை போட தடைக்கல்லாக தெரிய வருகிறது.
அனாவசியமாக நீதிமன்றத்தை காரணம் காட்டி அணுகுசா;லை போடுவதற்கு காலதாமதம் செய்வதை கண்டிப்பதுடன் இதை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,\
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது,.
உண்ணாவிரத போராட்டம் தொடங்கிய அ.சங்கரலிங்கத்துடன் அதிகாரிகள் பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்,. இதை தொடர்ந்து அவர் அங்கிருந்து கிளம்பி சென்றார்.
