• June 7, 2025

திராவிட மாடல் ஆட்சி இந்தியாவிற்கே  வழிகாட்டுகிறது; அமைச்சர் கீதாஜீவன் பெருமிதம்

 திராவிட மாடல் ஆட்சி இந்தியாவிற்கே  வழிகாட்டுகிறது; அமைச்சர் கீதாஜீவன் பெருமிதம்

முதல்அமைச்சர்  ஸ்டாலின் ஆட்சியில் இரண்டாண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் தூத்துக்குடி வட்ட கோவில், 3ம் மைல், ஆகிய இரு இடங்களில் நடைபெற்றது. இதில், வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் பேசியதாவது:-

, திமுக அரசு பொறுப்பேற்ற நாளில் கொரோனா பாதிப்பு நிதிநெருக்கடி எல்லாவற்றிலும் கருத்தில் கொண்டு நாட்டுமக்களுக்காக சிந்தித்து சிறப்பாக பணியாற்றி பல்வேறு நலத்திட்டங்களை முதல் அமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.

கொரோனா நிவாரணமாக ரூ.4000, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அரசு பள்ளியில் படித்த மாணவ மாணவியர்களுக்கு 7.5 சதவீதம் இடஓதுக்கிடு மூலம் மருத்துவபடிப்புக்கும்,  பெண் கல்வி உதவித்தொகை திட்டங்களை அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. செப்டம்பர் 15ம் தேதி முதல் மகளிர் உதவித்தொகை வழங்கப்படும். விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் செயல்படுத்தப்படுகிறது.

நெல் விவசாயம் செய்யும் பணிகள் அதிகரித்துள்ளது. 1.5 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. வீடு கட்டும் திட்டம், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை அதிகரிப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமணை பட்டா வழங்கப்பட்டு வருகிறது.  கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்வதற்கு மறுக்கப்பட்ட உரிமைக்கு விடுதலை வாங்கி கொடுத்தது திராவிட மாடல் ஆட்சிதான், 

இதனை பொறுக்க முடியாமல் தான் ஆளுநர் ரவி தினமும் ஏதாவது குட்டையை குழப்பி கொண்டு மீன்பிடிக்க திறிகிறார்கள் அதற்கு நாம் இடமளிக்க கூடாது திமுக அரசின் சாதனைகளை அனைத்து தரப்பினர் இல்லத்திற்கும் கொண்டு சேர்க்க வேண்டும்

வரும் நாடாளுமன்ற தேர்தலில்  தமிழகம் உள்பட புதுச்சேரி 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடவேண்டும். தமிழகத்திலிருந்து முதல்வர் யாரை கைகாட்டுகிறாரோ அவர்தான் பிரதமர் என்ற நிலை உருவாக வேண்டும்..

இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன்  பேசினார்.

மேயர் ஜெகன் பெரியசாமி மாநில வர்த்தக அணி துணைச்செயலாளர் தாமரை பாரதி, தலைமை பேச்சாளர் ஜஸ்டின் வில்மிரட், உள்பட பலர் பேசினார்கள்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *