• June 8, 2025

20 மாற்றுதிறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்; அமைச்சர் வழங்கினார்

 20 மாற்றுதிறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்; அமைச்சர் வழங்கினார்

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று (3.5.2023) மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நல உதவிகள் வழங்கும் நிகழச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்

அமைச்சர் பெ.கீதாஜீவன் , 20 பயனாளிகளுக்கு ரூ.16,70,000 மதிப்பிலான  இணைப்புச்  சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 20 பார்வையற்ற/ காதுகேளாதோர்களுக்கு ரூ.2,70,000 மதிப்பில் இலவச திறன்பேசிகளையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவர் . ஆ. பாலகுருசாமி, தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ரவி,  மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *