கோவில்பட்டி கி.ரா.நினைவரங்கத்தில் கோடைகால புத்தக கண்காட்சி

கோவில்பட்டி எட்டயபுரம் ரோட்டில் உள்ள .கி.ரா.நினைவரங்கத்தில் கோடைகால புத்தகக் கண்காட்சி நேற்று தொடங்கியது.. வருகிற 10-ந் தேதி வரை நடக்கும் இந்த புத்தக கண்காட்சி தொடக்க விழா நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் ரவி மாணிக்கம், ஆசியா பார்ம்ஸ் பாபு, பேராசிரியர் கருத்தப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர் .சுசிலா கண்காட்சியை திறந்து வைத்தார்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன், பேராசிரியை சந்தனமாரியம்மாள், சமூக ஆர்வலர் வினோபா, கவிஞர் பார்த்திபன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். நூலகர் அழகர்சாமி, பாரதி அறக்கட்டளை தலைவர் முத்து முருகன், திருவள்ளுவர் மன்ற துணைத்தலைவர் திருமலைமுத்துச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உரத்த சிந்தனை தலைவர் சிவானந்தம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கிளை மேலாளர் பூரணா ஏசுதாஸ், நன்றி கூறினார்
